கஞ்சா போதையில் சிறுவனை கையில் கத்தியோடு தாக்கும் 17 வயது கஞ்சா இளைஞர்.

நெல்சன் கென்னடி

UPDATED: Jul 29, 2024, 8:36:03 AM

வடசென்னை 

காசிமேடு துறைமுக பகுதிக்கு உட்பட்ட அத்திபட்டு பகுதியில் வசிப்பவர் சுதா,  கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் தற்கொலை செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் முதல் மகனான சூர்யா காசிமேடு துறைமுக பகுதியில் ரவுடியாக சுற்றி வருகிறார்

இளைய மகனான 17 வயதான இளைஞர் (ஆர்யா) இவர் மீதும் அடிதடி வழிப்பறி போன்ற வழக்குகள் உள்ளது.

கஞ்சா

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக எடுக்கப்பட்டதாக கூறப்படும் வீடியோ ஓன்று சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அதில் 17 வயதான ஆர்யா கஞ்சாவை பற்றவைத்து புகைத்து ரவுடி கூட்டாளிகளோடு சேர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை தனது வீட்டிற்கு அழைத்து வந்து ஆபாசமாக திட்டியபடி கையில் கத்தியுடன் சிறுவனை மிரட்டி தாக்கியுள்ளார்.

Chennai Crime News

அந்த சிறுவன் காலை தொட்டு விட்டும்படி கேட்டும் போதையில் இருந்த ஆர்யா தொடர்ந்த பயங்கர ஆயதத்தால் அடித்துள்ளார்.

அந்த சிறுவன் அழுது புலம்புவதும்,அதை போதை சிறுவர்கள் ரசிப்பது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது.

Tamil Nadu Crime News 

மேலும் பாதிப்பிற்குள்ளாகும் சிறுவன் சத்தம் போடவே சத்தம் போட வேண்டாம் என ஆர்யா மீண்டும் தாக்கும்படியான காட்சிகள் அந்த வீடியாவில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறான வீடியோ தற்போது சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

VIDEOS

Recommended