கொள்ளிடம் ஆற்றில் 6.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்த விவகாரம்

JK

UPDATED: Aug 5, 2024, 12:39:47 PM

திருச்சி

கொள்ளிடம் ஆற்றில் 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்த விவகாரத்தில் ஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் - முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி பேட்டி.

கர்நாடகாவில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அதிகப்படியான உபரி நீர் வெளியேறி மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவை  எட்டியது. 

மேட்டூர் அணை | கொள்ளிடம் ஆறு | காவிரி ஆறு | முக்கொம்பு மேலணை

இதனையடுத்து மேட்டூர் அணையில் இருந்து 2லட்சம் கன அடி நீரானது வெளியேற்றப்பட்ட நிலையில், திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து ஒரு லட்சத்து 30ஆயிரம் கன அடி தண்ணீர் கொள்ளிடம் ஆற்றிலும் 40,000 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றிலும் வெளியேற்றப்பட்டது. 

இந்த நிலையில், திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றின் நேப்பியர் மேம்பாலம் அருகே கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, 6.55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட தடுப்பணை, வெள்ளநீரில் 200 மீட்டர் அளவிலான தடுப்பணை சுவர் கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது.

அதிமுக

கட்டி குறைந்த நாட்களே ஆன நிலையில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட விவகாரத்தில் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்த நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமையில் உடைந்த தடுப்பணை பகுதியை அதிமுகவினர் பார்வையிட்டனர்.

இந்த நிகழ்வில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, பூனாட்சி, முன்னாள் அரசு கொறடா மனோகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி உட்பட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

எடப்பாடி

ஒரு வாரத்திற்குள் குழு அமைத்து முறைகேட்டை விசாரிக்க வேண்டும் இல்லை என்றால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தெரிவித்தார்.

 

VIDEOS

Recommended