ஆற்காடு அருகே மின் ஒயர் அறுந்து விழுந்து 30 ஆடுகள் பலி.

பரணி

UPDATED: Jun 2, 2024, 6:28:25 AM

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே உள்ள ஆனைமல்லூர் கிராமம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த பரசுராமன் மகன் சங்கர் (வயது 60) , என்பவருக்கு சொந்தமான சுமார் 75 வெள்ளாடு மற் றும் செம்மறி ஆடுகள் மேய்ச்சலுக்காக வயலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார்.

பின்னர் மாலை திமிரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் திடீரென பலத்த காற்று வீசியது, அப்போது சங்கர் ஆடுகளை வீட் டுக்கு ஓட்டி வரும் போது மழையினால் ரோட்டில் விழுந்திருந்த வேப்ப மரத்தின் தழைகளை ஆடுகள் மேய்ந்த போது எதிர்பாராத விதமாக மின் இணைப்பு அறுந்து வேப்ப மர கிளையின் மீது விழுந்ததால் மின்சாரம் தாக்கி 33 ஆடு கள் இறந்துள்ளது

இந்த சம்பவம்குறித்து திமிரி காவல் நிலைய ஆய் வாளர் தனலட்சுமி, தனிப்படை போலீசார் பாஸ்கரன் மற் றும் உதவி ஆய்வாளர்கள், போலீசார் சம்பவ இடத் திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் இடையே அப்பகுதியில் சோகத்தை ஏற்ற்படுத்தியுள்ளது.

 

VIDEOS

Recommended