• முகப்பு
  • குற்றம்
  • Marawila - 15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்ய முற்பட்ட வலம்புரிச் சங்குடன் நபர் கைது

Marawila - 15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்ய முற்பட்ட வலம்புரிச் சங்குடன் நபர் கைது

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Jul 7, 2024, 5:53:33 AM

15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்யமுற்பட்ட வலம்புரிச் சங்குடன் மாரவிலப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட்டுள்ளார்.

original/img-20240707-wa0027
புத்தளம் மாரவில பகுதியில் ஒருவர் வலம்புரிச் சங்கு வைத்திருப்பதாக மீரிகம விமானப்படைப் புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று பிற்பகல் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் இனைந்து 15 இலட்சம் ரூபா ஒப்பந்தம் அடிப்படையில் குறித்த நபரிடம் வலம்புரிச்சங்கை வாங்கும் நோக்கில் குறித்த நபரை வலம்புரிச் சங்குடன் கைது செய்துள்ளனர்.

இதன்போது மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய கைது செய்யப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட. வலம்புரிச் சங்கு சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று மாலை பிணையில் விடுவித்ததுடன் எதிர் வருகின்ற புதன் கிழமை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended