• முகப்பு
  • குற்றம்
  • குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை செய்து செல்போன் பறிப்பு.

குன்றத்தூரில் செங்கல் சூளை தொழிலாளியை கத்தியால் வெட்டி கொலை செய்து செல்போன் பறிப்பு.

S.முருகன்

UPDATED: May 28, 2024, 10:51:13 AM

Latest Crime News

விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(30), இவரது மனைவி செல்லம்மாள் இவர்களுக்கு இரண்டு வயது மற்றும் பத்து மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்

இவர்களது பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த நிலையில் அவர்களின் கடனை தீர்ப்பதற்காக கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் பணிபுரிய வந்துள்ளார்

Today Crime News In Tamil

நேற்று இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டி உள்ள பகுதியில் இயற்கை உபாதை கழிக்க நடந்து சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் அவரிடம் செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டி உள்ளனர்

அவர் செல்போனை கொடுக்க மறுத்ததையடுத்து ஆத்திரமடைந்த மர்ம கும்பல் கத்தியை திருப்பி வைத்து அவரது தலை மற்றும் கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர்

Read Crime News and Updates In Tamil

இதையடுத்து ரத்தக்காயங்களுடன் மயங்கிய அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக இறந்து போனார்

இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன ராஜேஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பதை குறித்து விசாரித்து வருகின்றனர்

Crime News and Updates

செங்கல் சூளையில் பணி புரிந்து வந்த நபர் இயற்கை உபாதை கழிக்க சென்றபோது வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு செல்போன் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

மேலும் இந்த செங்கல் சூளை அமைந்துள்ள பகுதியில் உரிய பாதுகாப்புகள் இல்லை என்றும் இங்கு பணிபுரிபவர்கள் சற்று அச்சத்துடன் பணிபுரிந்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இழந்துள்ளது.

 

VIDEOS

Recommended