• முகப்பு
  • குற்றம்
  • மதுரவாயலில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மரணம்.

மதுரவாயலில் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மரணம்.

சுந்தர்

UPDATED: May 28, 2024, 10:41:18 AM

Chennai News

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வசந்தகுமார் 36 கூலி வேலை செய்து வந்தார்.

குடிப்பழக்கம் இருப்பதால் இவரை சென்னை மதுரவாயல் அடுத்த வானகரம் பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேர்த்தனர்.

Live Chennai News

தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமார் இன்று உடல்நிலை சரியில்லை என இன்று மறுவாழ்வு மையத்தில் இருந்து தெரிவித்ததாகவும் பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்

இது குறித்து அவரது உறவினர்கள் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர் அந்த புகாரில் போதை மறுவாழ்வு மையத்தில் தனது அண்ணனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேர்த்ததாகவும் தற்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாகவும்

Chennai News and Updates

மேலும் அவரது உடலில் காயங்கள் மற்றும் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இருப்பதால் வசந்தகுமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும் குறிப்பிட்ட போதை மறு வாழ்வு மையத்தில் பணிபுரிந்தவர்களிடம் விசாரணை செய்ய வேண்டும் என புகார் அளித்தனர்

இந்த புகாரின் பேரில் மதுரவாயல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீரென இறந்து போன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended