• முகப்பு
  • குற்றம்
  • சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததால் அவரின் நண்பர் மற்றும் கார் ஓட்டுநர் கைது.

சவுக்கு சங்கர் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததால் அவரின் நண்பர் மற்றும் கார் ஓட்டுநர் கைது.

ராஜா

UPDATED: May 5, 2024, 8:09:01 PM

சமூக வலைதளத்தில் பெண் காவல்துறை மற்றும் உயர் காவல் அதிகாரிகள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக யூடியூபில் சவுக்கு சங்கர் நேற்று அதிகாலை தேனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

இந்நிலையில் தேனி தனியார் தங்கும் விடுதியில் சவுக்கு சங்கர் உடன் அவருடைய நண்பர் ராஜரத்தினம் மற்றும் வாகன ஓட்டுனர் ராம் பிரபு ஆகியோரை தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்ற நிலையில்

அவர்கள் பயன்படுத்திய காரில் கஞ்சா வைத்திருந்ததாக கூறி சவுக்கு சங்கரி நண்பர் ராஜரத்தினம் மற்றும் வாகன ஓட்டுனர் ராம் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

போலீசாரை தகாத வார்த்தையில் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

  • 4

VIDEOS

Recommended