லஞ்சம் கேட்ட வழக்கில் நான்கு காவலர்கள் பணியிட நீக்கம்.

JK

UPDATED: Aug 17, 2024, 1:02:02 PM

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. 

அதன்படி மணப்பாறை உட்கோட்டத்தின் புத்தாநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளார் லியோனி ரஞ்சித்குமார்

தலைமையில், வையம்பட்டி காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் ஷாகுல் ஹமீது, வீரபாண்டி, மணப்பாறை.காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் மணிகண்டன் அடங்கிய தனிப்படை அமைக்கபட்டு இருந்தது.

Latest Crime News

மேற்படி தனிப்படையினர் கடந்த, 09ம் தேதி வளநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்னகோனார்பட்டியில் சிறப்பு தணிக்கையில் ஈடுபட்டபோது, அங்கு சட்டவிரோதமாக ஏர் கன் (Air Gun) ஒன்றினை வைத்துக்கொண்டு பறவைகளை வேட்டையாடிக் கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் கல்லிஅடக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சதாசிவம் (28), ராமசாமி (25), புதுக்கோட்டை மாவட்டம் மலைக்குடிபட்டியை சேர்ந்த நாகராஜன் (33) ஆகியோரை தனிப்படையினர் பிடித்து விசாரித்தனர். 

விசாரணைக்குப் பிறகு, காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக அவர்களிடம் ஒரு லட்சம் பணம் லஞ்சமாக கேட்டுள்ளனர்.

Latest Trichy District News

மேற்படி பணத்தினை வளநாடு கைகாட்டியில் உள்ள ஏரிக்கரைக்கு அருகில் சதாசிவம் என்பவரின் உறவினர் விஜயகுமார் மூலம் தனிப்படையினர் பணம் பெற்றுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் 9487464651 எண்ணிற்கு தகவல் கிடைத்தது. 

தகவலின் பேரில் சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டார். 

விசாரணையில் குற்றச்சாட்டை உறுதி செய்ததின் அடிப்படையில் 4 பேர் மீது 3(பி)ன் கீழ் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

Corruption 

மேலும், உதவி ஆய்வாளர் லியோனி ரஞ்சித்குமார். உட்பட மூன்று காவலர்களையும் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், இதுபோன்ற குற்றசெயல்களில் ஈடுபடும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.

 

VIDEOS

Recommended