• முகப்பு
  • லஞ்சம்
  • திருச்சி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை - 97 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்.

திருச்சி தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை - 97 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்.

JK

UPDATED: Oct 25, 2024, 6:42:43 PM

திருச்சி 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தற்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளி நெருங்கி வருவதையொட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில்,

திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தீயணைப்பு துறை அலுவலகத்தில் கணக்கில் வராத 97ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 1 மணிக்கு துவங்கிய சோதனை 3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து வருகிறது.

 

VIDEOS

Recommended