• முகப்பு
  • லஞ்சம்
  • சேத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சேத்தூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அந்தோணி ராஜ்

UPDATED: Jul 15, 2024, 7:27:35 PM

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதியும்போது வரக்கூடிய பொதுமக்களை மிரட்டி லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்புதுறைக்கு புகார்கள் சென்றுள்ளது. 

அதன் அடிப்படையில் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் சேத்தூரில் முகாமிட்டு சார் பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்துள்ளனர். 

Latest District News 

இந்நிலையில் சேத்தூர் சார்பதிவாளர் கார்த்திகேயன் தனது பணியை முடித்து இருசக்கர வாகனத்தில் கிளம்பும் வேலையில் அவரை சுற்றி வளைத்த லஞ்ச ஒழிப்பு துறையினர் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

தொடர்ந்து அவரது வாகனத்தில் இருந்து 14800 ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர்.

News

பறிமுதல் செய்த பணத்திற்கு கார்த்திகேயனிடம் கணக்கு கேட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திகேயன் சரியான பதில் அளிக்காத நிலையில் அவரிடம் தங்களது விசாரணையை செய்துள்ளனர்.

கணக்கில் வராத பணம் சார்பதிவாளர் இடம் இருக்கும்போது இது தொடர்பாக ஏகப்பட்ட குழப்பங்கள் வந்த நிலையில் சார்பதிவாளர் கார்த்திகேயனை லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரித்து வருகின்றனர்.

 

VIDEOS

Recommended