பி.எப்.ல் இருந்து ரூ.1 லட்சம் வரை முன்பணம் பெற விண்ணப்பியுங்கள்.

Bala

UPDATED: Jun 20, 2024, 7:14:33 PM

இனி பி.எப். அலுவலகத்துக்கு செல்லாமல், வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் விண்ணப்பித்து, ஒரு லட்சம் ரூபாய் வரை முன் பணம் பெறும் புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்துள்ளது.

பி.எப். கணக்கினை கொண்டுள்ள சந்தாதாரர்கள், தங்கள் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு, வீட்டு கட்டுமானம், மனை வாங்குதல் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக முன் பணம் பெற முடிகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையில், விண்ணப்பிக்கும் தொகை ரூ.50 ஆயிரத்துக்கு குறைவாக இருந்தால், தேவையான ஆவணங்கள் சரியாக இருந்தால் உடனடியாக அங்கீகாரம் கிடைக்கின்றது.

இப்பொழுது இந்த நடைமுறையில் மேலும் மேம்படுத்தி, அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை விரைவாக கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், இரண்டு அல்லது மூன்று நாட்களில் சந்தாதாரரின் வங்கி கணக்கில் பணம் வரலாம். புதிய நடைமுறையை பி.எப். சந்தாதாரர்கள் ஆர்வமுடன் வரவேற்கின்றனர்.

 

VIDEOS

Recommended