வவுனியா பல்கலைக்கழகத்தில் இளைஞர் மாநாடு 

வவுனியா

UPDATED: Aug 12, 2024, 7:07:07 AM

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான இளைஞர்களை ஒன்று திரட்டி இளைஞர் மாநாடு வவுனியாவில் ஆரம்பமானது.

நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கான செயற்திட்டம் எனும் கருப்பொருளில் குறித்த மாநாடு இடம்பெறுகின்றது.

அமெரிக்க மக்களின் நிதி உதவி நிறுவனமான யுஎஸ் எயிட் நிறுவனத்தின் நிதிப் பங்களிப்போடு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அனுசரணையுடன் வவுனியா பகலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு வவுனியா பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமானது.

இலங்கையில் உள்ள 17 பல்கலைக்கழகங்கள் மற்றும் இரண்டு வளாகங்களில் இருந்து மாணவர்கள் பங்கேற்றுள்ளதுடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் மற்றும் அதிகாரிகளும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் யுஎஸ்ஏயிட் அமைப்பினுடைய பதிவிடப் பிரதிநிதி உட்பட வவுனியாப்பல்கலைக் கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இன்று காலை வவுனியா பல்கலைக்கழக முன்றலில் இருந்து இன்னிய வாத்தியங்களுடன் அழைத்து வரப்பட்ட அதிதிகளும் மாணவர்களும் இளைஞர்களும் மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.

இதன்போது நல்லிணக்கத்திற்கான சமூகத்தை கட்டி எழுப்புதல் தொடர்பான கருத்தரங்கும் இடம்பெற்றுள்ளது.

 

 

 

VIDEOS

Recommended