• முகப்பு
  • இலங்கை
  • எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் பலி

எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் பலி

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Oct 17, 2024, 10:26:56 AM

புத்தளம் எலுவாங்குளம் பகுதியில் காட்டு யானைத் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளம் புதிய எலுவாங்குளம் ஐலிய கிராமம் பகுதியில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் காட்டு யானைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்போது புத்தளம் மாவட்டத்திற்கான திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டதுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு உத்தரவு பிறப்பித்தார்.

original/1729160400810
இவ்வாறு உயிரிழந்தவர் முந்தல் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவரெனவும் தோட்டமொன்றில் காவலாளியாக கடமைபுரிந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வண்ணாத்திவில்லு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended