• முகப்பு
  • இலங்கை
  • ஓட்டமாவடியில் "தோப்பாகிய தனிமரம்" நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்     

ஓட்டமாவடியில் "தோப்பாகிய தனிமரம்" நினைவேந்தல் நிகழ்வும் இளைஞர் மாநாடும்     

Ramsy kudthoos

UPDATED: Sep 16, 2024, 5:18:06 AM

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் நினைவு தினத்தில் "தோப்பாகிய தனிமரம் " நினைவேந்தல் நிகழ்வும் ,இளைஞர் மாநாடும் இன்று திங்கள் கிழமை 16 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில், கல்குடா தொகுதி , ஓட்டமாவடியில் நடைபெறவுள்ளது.  

இந் நிகழ்வு இன்று திங்கள் கிழமை( 16)பிற்பகல் 3.30 மணிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் ஓட்டமாவடி அமீரலி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. 

நிகழ்வில் அதிதிப் பேச்சாளர்களாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் செயற்குழு உறுப்பினரும்>தேசிய முஸ்லிம் லீக்கின் மாணவரணி துணைத் தலைவருமான புளியங்குடி அல்அமீன், மனித உரிமை செயற்பாட்டாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஊக்குவிப்புப் பேச்சாளர் பாஸிர் மொஹிதீன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.    

 இதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும்>நாடளாவிய ரீதியில் ஏழாயிரம் இளைஞர்களும்>கட்சித் தொண்டர்களும்> ஆதரவாளர்களும் கலந்து கொள்வர்.

 

VIDEOS

Recommended