• முகப்பு
  • இலங்கை
  • சனிக்கிழமை வாக்களிக்க தயாராகும் யாழ் மாவட்ட மக்கள் - ஏற்பாடு தொடர்பில் - அரச அதிபர்

சனிக்கிழமை வாக்களிக்க தயாராகும் யாழ் மாவட்ட மக்கள் - ஏற்பாடு தொடர்பில் - அரச அதிபர்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Sep 19, 2024, 5:01:38 PM

தமிழர்கள் செறிந்து வாழும் வடமாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வாக்காளர்களாக 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபரும்>தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

இதே வேளை 18 வயதை பூர்த்தி அடைந்த 2463 பேர் குறை நிரப்பு பட்டியல் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவு பகுதியில் மக்கள் வாக்களித்ததன் பின்னர் விமானப் படையின் உதவியுடன் வாக்குப் பெட்டிகள் வாக்குள் என்னும் இடத்திற்கு கொண்டுவரப்படவுள்ளது.

 

 

 

VIDEOS

Recommended