ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியருக்கு 7வருட சிறை.

JK

UPDATED: Sep 19, 2024, 6:26:41 PM

திருச்சி 

கடந்த 26.04.2022-ந்தேதி அரசு மருத்துவமனை காவல்நிலைய பகுதியில் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பபதிவு செய்து ஸ்ரீரங்கம் கண்டி தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் சுரேஷ்(66) காவல்துறையினர் கைது செய்தனர். 

இவ்வழக்கின் புலன் விசாரணை முடிக்கப்பட்டு, கடந்த 04.08.22-ந்தேதி மேற்படி எதிரி சுரேஷ் மீது குற்றப்பத்திரிக்கையை புலன் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள்.

Latest Crime News Today In Tamil 

தொடர்ந்து வழக்கானது திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. மேற்படி வழக்கில் திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்க்கு 7ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ,11,500/- அபராதமும், மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000/- நிவாரண தொகை வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பு வழங்கினார்.

என்னை தொடர்ந்து சுரேஷ் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

 

VIDEOS

Recommended