• முகப்பு
  • இலங்கை
  • தொடரூந்து சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடருகிறது

தொடரூந்து சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடருகிறது

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 10, 2024, 3:39:57 AM

தொடரூந்து சாரதிகள் குழுவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது நாளாகவும் தொடரும் என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 இரண்டாம் வகுப்பு பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பில் தாமதம் உள்ளிட்ட பல பிரச்னைகளின் அடிப்படையில் கடந்த 06ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் இந்த தொழில் நடவடிக்கையை தொடங்கினர்.

 5 ரயில் நிலையங்களில் இரண்டு ரயில் நிலையங்களின் சாரதிகள் மாத்திரம் இந்தப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்ஜின் ரயில்கள் இயங்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 எவ்வாறாயினும், லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட 05 தொழிற்சங்கங்களுக்கு இன்று தமது பிரச்சினைகளை முன்வைக்க கலந்துரையாடல் ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

 அதன்படி இன்று நண்பகல் 12 மணிக்கு நெடுஞ்சாலைகள் அமைச்சில் போக்குவரத்து அமைச்சர் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 எவ்வாறாயினும், இது வரையில் அவ்வாறானதொரு கலந்துரையாடல் இடம்பெறும் என தமக்கு தெரியாது என லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ்.ஆர்.சி.எம்.சேனாநாயக்க தெரிவித்துத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை, இன்று காலை 47 அலுவலக ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

 எவ்வாறாயினும், இன்று காலை 20 அலுவலக ரயில்கள் இயங்காது என லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் இன்ஜினியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

VIDEOS

Recommended