புத்தளத்தில் 7ம் கட்டைப் பகுதியில் நடந்த துயர சம்பவம்

ஏ. என். எம். முஸ்பிக்

UPDATED: Jun 30, 2024, 5:28:39 AM

புத்தளம் 7ம் கட்டைப் பகுதியில் வீதியில் நின்ற காட்டு யானையை பார்த்த பீதியில், முச்சக்கர வண்டியைத் திருப்ப முயன்ற போது, ​​மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம் வீதியின் 7ம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை முச்சக்கரவண்டி மற்றும் வேன் மோதியதில், முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, வீதியைக் கடந்த காட்டு யானையைப் பார்த்து திரும்ப முயன்றபோது, ​​புத்தளத்திலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது மோதியது. இதனால், இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த வீதியில் தினமும் காட்டு யானைகள் நடமாடுவதால், கவனக்குறைவாக வாகனம் செலுத்துவதால் விபத்துக்கள் ஏற்படுவதன் காரணமாக, இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த வீதியில் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

விபத்தில் உயிரிழந்தவர் இராஜாங்கனை சோலவெவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended