• முகப்பு
  • இலங்கை
  • பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாயாக  அதிகரிக்க கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாயாக  அதிகரிக்க கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ராமு தனராஜா

UPDATED: Apr 21, 2024, 2:55:10 PM

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1700 ரூபாய்யாக அதிகரிக்க கோரி இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் இன்றைய தினம் பதுளை பகுதிகளின் பல இடங்களில் அறவழி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

original/img-20240421-wa0075
இதன்போது லுணுகலை,பசறை மடுல்சீமை,நமுனுகுல ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் கருப்பு பட்டி அணிந்து பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறு பசறை நகரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் சிவலிங்கம், ஹல்தமுல்ல பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அசோக்குமார், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மாநில இயக்குநர் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

Recommended