• முகப்பு
  • இலங்கை
  • ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு ​தேர்தல் பிரசார செயற்பாடுள்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கொழும்பு ​தேர்தல் பிரசார செயற்பாடுள்

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Oct 16, 2024, 3:14:48 PM

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கு பெரும் பணிகளை ஆற்றிய ஒருவர்.இம்முறை அவரது ஆலோசனையின் பேரில் தலைநகரில் வாழும் மக்களுக்கும் பணி செய்வதற்கான ஒரு சந்தர்ந்தப்பத்தை எற்படுத்தும் வகையில் கொழும்பில் வீணை சின்னத்தில் எமது பலமான அணியினர் போட்டியிடுவவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவரும்,சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளருமான கலாநிதி பாபு சர்மா கூறினார்.

இன்றைய தினம் கொழும்பில் கட்சியின் தேர்தல் பிரசார செயற்பாடுகளை ஆரம்பித்து வைத்து கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் இதன் போது குறிப்பிடுகையில் -

வடக்கில் கையகப்படுத்த காணிகளை அவர் மக்களுக்கு விடுவித்து கொடுத்துள்ளார்.அத்துடன் மூடப்பட்டிருந்த பல ஆலயங்களை திறந்து வழிபாடுகளை மக்கள் மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார்.

இது மட்டுல்லாமல் பல அபிவிருத்தி திட்டங்களை யாழிலும் வேறு பல பிரதேசங்களிலும் செய்துள்ளார்.இதனது தொடராக தலை நகரில் வாழும் மக்களுக்கு அந்த பணியினை மேற்கொள்ள எமது அணியினை வெற்றியினை மக்கள் உறுதிப்படுத்துவார்கள் என்றும் இதன் போது அவர் கூறினார்.

இதன் போது கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளரும்,முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினருமான எஸ்.ராஜேந்திரனும் கருத்துரைத்தார்.

 

VIDEOS

Recommended