• முகப்பு
  • இலங்கை
  • இ.தொ.காவின் நுவரெலியா மாவட்ட முதல்நாள் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார் ஜீவன் தொண்டமான்

இ.தொ.காவின் நுவரெலியா மாவட்ட முதல்நாள் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார் ஜீவன் தொண்டமான்

ஊடக பிரிவு

UPDATED: Oct 16, 2024, 1:11:04 PM

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஜீவன் தொண்டமான் இன்று (16) நோர்வூட் பிரதேசத்திற்குற்பட்ட நிவ்வெலி, வெஞ்சர், லோரன்ஸ், சென் ஜோன் டிலரி, நோர்வூட் தோட்டம், கெக்கர்ஸ்வோல்ட், ரொக்வூட் ஆகிய தோட்டங்களில் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தார்.

கடந்த நான்கு வருடங்களில் தனக்கு கிடைத்த ஒதுக்கீட்டின்படி பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தான் உழைத்ததாகவும், இதுவரையில் தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ்₹ மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

யானை சின்னத்தில் கீழ் இல 4 ஜீவன்தொண்டமான், இல 6 பழனி சக்திவேல் , இல 7 மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் போட்டி இடுகின்றனர்.

 

VIDEOS

Recommended