• முகப்பு
  • இலங்கை
  • வடக்கு மாகாண ஆளுநரால், கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநரால், கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

Irshad Rahumathulla

UPDATED: Jul 8, 2024, 4:05:55 PM

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 13 கல்விமாணி பட்டதாரிகளுக்கு ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (08/07/2024) ஆசிரியர் நியமனம் வழங்கினார். இந்த நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

கற்றுக்கொண்ட நுட்பங்களை பாடசாலைகளில் பயன்படுத்தி, கற்பித்தல் செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என இதன்போது கௌரவ ஆளுநர் தெரிவித்தார்.

இதன் மூலம் கல்வித் தரத்தை பேணுவதுடன், மாணவர்கள் எளிதில் கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். மாணவர்கள் விருப்பமாக பாடசாலைக்கு வர வகுப்பறைகளை மாற்ற வேண்டும் என்றும், ஆசிரியர்கள் மாணவர்களின் முன்மாதிரியாக திகழ வேண்டும் என்றும்  ஆளுநர் வலியுறுத்தினார்.

வடக்கு மாகாணத்தின் ஆரம்ப மற்றும் இடைநிலை பள்ளிகளில் இன்று நியமனம் பெற்ற புதிய ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

15 ஆம் திகதிக்கு முன்னர், புதிய ஆசிரியர்கள் தங்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட பாடசாலைகளில் கடமைகளை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

VIDEOS

Recommended