• முகப்பு
  • இலங்கை
  • ராஜபக்ஷவின் வெற்றிக்கு கண்டி வாழ் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

ராஜபக்ஷவின் வெற்றிக்கு கண்டி வாழ் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும்

ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Aug 5, 2024, 2:09:24 AM

தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ள முன்னாள் அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷவின் வெற்றிக்கு கண்டி வாழ் தமிழ் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுகந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட தமிழ் அமைப்பளர் தேசகீர்தி முருகேசு தீபன் வேண்டுகோள் விடுத்தார். 

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு அவர்இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் 

இம்முறை இடம் பெற உள்ள ஜனாதிபதித் தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைய வேண்டும் . தொடர்ந்து மலையக மக்கள் ஏமாற முடியாது. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் விஜேயதாச ராஜபக்ஷ அவர்கள் கடந்த காலங்களில் அமைச்சராக இருந்த போது பல்வேறு வியங்களை செயல் வடிவில் காட்டியவர்.

பல சந்தர்ப்பங்களில் துணிந்து முடிவுகளை எடுத்தவர். தமிழ் பேசும் மக்களுக்காக குரல் கொடுத்தவர். இக்கட்டான போது பல ஊகங்களைத் தெரிவித்தவர். உயிர்த்த ஞாயிறு போன்ற தாக்குதல்களுக்கு முன்பு பயங்கரவாதம் பற்றி எச்சரிக்கை விடுத்தவர். எனவே அவர் வெற்றிக்கு நாமும் ஒன்றுப்பட வேண்டும். 

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகி்னறனர். குறிப்பாக கண்டி மாகியாவ மக்களுக்கு வீட்டுத்திட்டம், வீட்டு உரிமை என்று பலர் ஏமாற்றிவருகின்றனர். இதுவரை எந்த அரசும் வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொடுக்க வில்லை . 1827 ஆம் ஆண்டு தொடக்கம் மஹய்யாவ பகுதியில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

 எமக்கான வீட்டு உரிமை எந்த அரசங்கத்திலும் பெற்றுக்கொடுக்கப்பட வில்லை சென்ற மாதம் முதல் பல இடங்களில் அரசினால் 'உரிமய' காணி உறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் மஹய்யாவ மக்கள் புரக்கணிக்கப்பட்டுள்ளனர். எமது பிராச்சினைக்கு நாமே தீர்வு காண்போம் .

 எனவே இம்முறை ஜனாதிபதி வேட்பாளரான விஜேயதாச ராஜபக்ஷ அவர்களை ஆதாரிக்க வேண்டும் என்கிறார் .

 

VIDEOS

Recommended