• முகப்பு
  • இலங்கை
  • வாக்குச் சாவடிகளில் இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு

வாக்குச் சாவடிகளில் இடையூறு ஏற்படுத்தினால் துப்பாக்கிச் சூடு

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 7, 2024, 5:07:53 PM

எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த, பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

   மேலும், வாக்குச் சாவடிகளில் இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் கலவரங்களில் ஈடுபடுபவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும், தேர்தல்கள் ஆணைக்குழு பொலிஸாரை அறிவுறுத்தியுள்ளது.

 இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டு, சட்ட விரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் மற்றும் பாதாள உலகக் கூட்டத்தினர் ஆகியோரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக விசேட குழுக்களும் நியமிக்கப்படவுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

original/img-20240907-wa0131
இதேவேளை, இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்ற வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை, ஒரு கோடியே 70 இலட்சம் எனவும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு சுமார் 10 இலட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.



VIDEOS

Recommended