• முகப்பு
  • இலங்கை
  • கிழக்கு ஆளுனர் திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -செல்வராசா கஜேந்திரன்

கிழக்கு ஆளுனர் திருக்கோணேஸ்வர ஆலய விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் -செல்வராசா கஜேந்திரன்

ஏ. எம். கீத்

UPDATED: Aug 13, 2024, 11:41:47 AM

திருகோணமலையில் திருக்கோனேச்சரத்தின் விவகாரத்தில் அப்பட்டமான விடயங்களை கூறி நிர்வாகத்தை கலைத்து இடைக்கால நிருவாகம் ஊடாக தங்களும் இணைந்து செயற்படுவதற்கு கிழக்கு ஆளுநர் முயற்சிப்பதை உடன் நிறுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் அப்பட்டமான விடயங்களை கூறி பேரினவாத சக்திகளுக்கும் திருகோணமலை திருக்கோனேஸ்வர ஆலயத்தில் தலையிட வேண்டாம்.

தமிழ் மக்களின் இறுப்பை பாதுகாருங்கள் மக்கள் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரைகளைகளையும்அமைக்கின்றனர் இதனை தடுத்து நிறுத்த முடியாமல் இருக்கும் கிழக்கு ஆளுனர் இவ் விவகாரத்தில் தலையிட வேண்டாம். நிருவாக சபை அதற்குதான் உள்ளது என்றார்.

 

VIDEOS

Recommended