சசிகுமார் காலம் முழுக்க இந்த மக்களுடன் தான் இருப்பவன்
இர்ஷாத் றஹ்மத்துல்லா
UPDATED: Oct 24, 2024, 2:47:29 AM
எமது மக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கான தீர்வை எமது தலைவர் மனோ கணேஷன் அவர்களின் பங்ளிப்புடன் கூடிய சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் பெற்றுக் கொடுக்கப்படும் என்று கம்பஹா மாவட்ட ஜக்கிய மக்கள் கூட்டணியின் 18 ஆம் இலக்க வேட்பாளர் எஸ்.சசிகுமார் தெரிவித்தார்.
நேற்றைய தினம் வத்தள கெரவலபிட்டி பரனவத்த பகுதியில் இடம் பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் இதன் போது தெரிவி;க்கையில் -
இன்று எமது நாட்டுக்கு தேவையானது வலுவான பொருளாதாரம்இதனை கொண்டுவர நாட்டின் உற்பத்திகளை செய்து அதனை வெளிநாடுகளுக்கு அனுப்புவதன் மூலம் தான் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணமுடியும்.
இந்த தேர்தலில் உங்களை தேடி இல்லாத உறவு முறைகளை சொல்லிக் கொண்டு பணத்துடன் வருவார்கள்.அதனை வாங்குங்கள் இவர்கள் தேர்தலுக்கு மட்டுடே வருவார்கள்.இந்த சசிகுமார் காலம் முழுக்க இந்த மக்களுடன் தான் இருப்பவன்.அப்படியானால் நீங்கள் உங்களது வாக்குகளை யாருக்கு வழங்க வேண்டும் என்று தீர்மாணித்திருப்பீர்கள்.
இன்iறைய தினம் நாம் தனித்து உங்களிடம் வரவில்லை எனது நண்பரும்,சிறந்த அரசியல வாதியுமான நியோமல் பெரேரா அவர்களுடன் வந்துள்ளேன்.
ஆதற்கு காரணம்; இருக்கின்றது,கடந்த காலங்களில் எமது வாக்குகளால் ;பாராளுமன்றம் சென்றவர்கள்,கட்சி மாறி பதவிகளை பெற்று எமது மக்களை மறந்துவிட்டார்கள்.மீண்டும் அவர்களை அழைத்து வந்து உங்களிடம் வாக்கை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தால் இதனையே செய்வார்கள்,
ஆனாhல் நியோமல் பெரேரா வசதி படைத்தவர்.அவர் மக்களுக்கு பணி செய்பவர்.எனவே தான் இம்முறை நாம் இருவரும் பாராளுமன்றம் ஒன்றாக செல்ல இந்த முயற்சியினை முன்னெடுத்துள்ளோம் என்றும் கூறினார்.
இதன் போது வேட்பாளர் நியோமல் பெரேராவும் உரையாற்றினார்..