• முகப்பு
  • போக்சோ
  • 16 வயது நிரம்பிய நர்சிங் கல்லூரி மாணவியை , பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று வாலிபர்கள் பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பம் ஆக்கிய கொடுமை

16 வயது நிரம்பிய நர்சிங் கல்லூரி மாணவியை , பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய மூன்று வாலிபர்கள் பாலியல் வல்லுறவு செய்து கர்ப்பம் ஆக்கிய கொடுமை

லட்சுமி காந்த்

UPDATED: Oct 23, 2024, 12:27:13 PM

பாலியல் வல்லுறவு

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மீனா சங்கர் தம்பதிகள். இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள்.

இவர்களுக்கு பொறியியல் படிக்கும் ஒரு மகனும், பத்தாவது முடித்துவிட்டு பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் டிப்ளமோ நர்சிங் படிக்கும் 16 வயது நிரம்பிய மகளும் உள்ளனர். 

இவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே யாத்திரி நிவாஸ் என்ற அரசின் தங்கும் விடுதி உள்ளது. கோவில்களுக்கும் பட்டு சேலைகள் வாங்குவதற்கும் வருகின்ற சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்ல சுமார் 50க்கும் மேற்பட்ட தனியார் ஆட்டோக்கள் உள்ளது. 

Latest Crime News Today In Tamil 

இந்நிலையில் இந்த ஆட்டோ ஸ்டாண்டில் , சார்லஸ் என்பவரின் கொலை வழக்கில் தொடர்புடைய சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த, ஆட்டோ ஓட்டுநர் குலசேகரன் (எ) கிஷோர் (வயது 26) என்ற வாலிபர் தன் சக கூட்டாளிகளான பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள, ஒலிமுகமது பேட்டை சிவிஎம் நகர் பகுதியை சேர்ந்த ரித்திஷ் (வயது 21) மற்றும் கைலாசநாதர் கோயில் பகுதியை சேர்ந்த கஞ்சா விற்பனை செய்யும் வெங்கட் (வயது 21) ஆகியோருடன் சேர்ந்து அந்த சிறுமியை அவ்வப்போது மிரட்டி, கட்டாயப்படுத்தி கூட்டு பாலியல் வல்லுறவு மேற்கொண்டதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

போக்சோ

சிறுமியின் தாய் மீனாசங்கர் அளித்த புகார் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அவர்கள் , கிஷோர் மற்றும் ரித்திஷ் ஆகிய இரண்டு வாலிபர்களை கைது செய்து போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள வெங்கட் என்பவனை வலைவீசி தேடி வருகின்றனர்.

கூட்டு பாலியல் வல்லுறவு 

"மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த நர்சிங் பயிலும் மாணவியை" அவ்வப்போது மிரட்டி கூட்டு பாலியல் வல்லுறவு செய்த சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கூட்டு வல்லுறவு சம்பவத்தில் மேலும் சிலர் ஈடுபட்டிருக்க வாய்ப்புள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended