• முகப்பு
  • குற்றம்
  • நிலமோசடி வழக்கு கைதான அழகப்பனின்  மேலாளருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது கோர்ட்டில் நடிகை கவுதமி மனு

நிலமோசடி வழக்கு கைதான அழகப்பனின்  மேலாளருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது கோர்ட்டில் நடிகை கவுதமி மனு

கார்மேகம்

UPDATED: Oct 24, 2024, 1:16:55 PM

இராமநாதபுரம்

நடிகை கவுதமியின் உதவியாளராக சினிமா பைனான்சியர் அழகப்பன் இருந்து வந்தார் இவர் உள்பட சிலர் மீது நடிகை கவுதமி நிலமோசடி புகார் அளித்தார் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அழகப்பனை கைது செய்தனர்

அழகப்பனின் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் மேலாளரான மதுரை கருப்பாயூரணி கங்கைபுரம் 2- வது வீதியை சேர்ந்த ரமேஸ் சங்கர் (55 என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்

இந்த நிலையில் நேற்று மேற்கண்ட ரமேஸ் சங்கர் ராமநாதபுரம் மாவட்ட கோர்ட்டில் ஜாமீன் வழங்க கோரி மீண்டும் மனு தாக்கல் செய்தார்

அப்போது நடிகை கவுதமி நேரில் ஆஜராகி தனது வக்கீல் மூலம் மேற்கண்ட ரமேஸ் சங்கர் இந்த மோசடியில் முக்கிய நபராக உள்ளதாலும் அவருக்கு ஜாமீன் வழங்கினால் ஆதாரங்களை கலைத்துவிடுவார் என்றும் கூறி ஜாமீன் வழங்கக்கூடாது என கேட்டு நேரில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு மீதான விசாரணையின் அடிப்படையில் உத்தரவு வழங்கப்ப்படும் என கூறப்படுகிறது.

 

VIDEOS

Recommended