• முகப்பு
  • இலங்கை
  • தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெள்ளிக்கிழமையின் பின்னர் தீர்மானம்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெள்ளிக்கிழமையின் பின்னர் தீர்மானம்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: May 29, 2024, 4:04:31 PM

தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நீதிமன்றம் மீண்டும் வெள்ளிக்கிழமை தனது தீர்மானத்தை அறிவிக்கும் அதனை அடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கொழும்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவானியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு செந்தில் தொண்டமான் கூறினார்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தொடர்ந்து அனைத்து தொழிற்சங்கங்களுடணும் ஒன்றித்து தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

 வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதில் தொடர்ந்து முதலாளிமார் சமூகத்துடன் பல சுற்று பேச்சுக்களை நடத்தி இருந்தோம்என்றும் கூறினார்.

இது தொடர்பிலான முழுமையான ஒளி நாடாவை செய்தியை பார்வையிடலாம் -



 

VIDEOS

Recommended