• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்ப்பு மனு தாக்களின் பின்னர் கருத்து தெரிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேட்ப்பு மனு தாக்களின் பின்னர் கருத்து தெரிவிப்பு

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Aug 16, 2024, 4:39:36 AM

செப்டம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்யும் காலம் நேற்றுடன் நிரைவு பெற்றது .

 இதனை அடுத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்த பின்னர் ஆதரவாளர் மத்தியிலும் ஊடகவியலாளர் மத்தியிலும் கருத்து தெரிவித்தார்.

 தற்போது இங்கு வந்திருக்கின்ற அநேகமானவர்கள் கடந்த காலத்தை பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்.

 வாகனங்களிலே அழைத்து வரப்பட்டிருக்கிறார்கள். அதற்கான பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்கு வழி செய்தவன் நானே 

அது மட்டும் அல்ல இங்கு வந்தவர்களுக்கு உணவு பார்சல் வழங்கப்படுகிறது அதையும் பெற்றுக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்தியதும் நாமே என்பதை மறந்து விட முடியாது.

 எனவே எம்முடன் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்கும் பயணிப்பதற்கு மீண்டும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரகமசிங்க கூறினார்.

 

VIDEOS

Recommended