• முகப்பு
  • இலங்கை
  • ஜனாதிபதி அனுர திஸாநாயக்க எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்துவார் - ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு ரணில் தெரிவிப்பு

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்துவார் - ஜனாதிபதி அனுர திஸாநாயக்கவுக்கு ரணில் தெரிவிப்பு

இர்ஷாத் றஹ்மத்துல்லா

UPDATED: Sep 22, 2024, 6:00:40 PM

செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை மக்கள் வழங்கிய ஆதரவிற்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுர திஸாநாயக்க எதிர்காலத்தில் நாட்டை வழிநடத்துவார் என நம்புவதாகவும்  முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி, புதிய ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் நாடு பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் முன்னேறும் என நம்புவதாகவும் தெரிவித்தார்இரண்டு வருடங்களுக்கு முன், நெருக்கடியில் சிக்கி வங்குராத்தான நாட்டை ஏற்றுக்கொண்டு, சவால்களுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக பொருளாதாரத்தை மீட்டெடுத்ததாகவும், தனது அரசியல் வாழ்க்கையில் நாட்டிற்குச் செய்யக்கூடிய மிக முக்கியமான பணியென அதனை கருதுவதாகவும் ஜனாதிபதித் தேர்தல் வெற்றிகரமாக நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வழிநடத்துவதில் தான் ஆற்றிய பங்கை எதிர்கால சந்ததியினர் சரியாக மதிப்பிடுவார்கள் என்றும் வரலாற்றில் தனக்கான இடம் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என்றும், தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மக்களை சிரமங்களில் இருந்து விடுவிக்க தான் முயற்சித்ததாகவும், எஞ்சியிருக்கும் சவால்களுக்கு புதிய ஜனாதிபதி தீர்வை வழங்குவார் என தாம் நம்புவதாகவும், இக்கட்டான காலங்களில் இலங்கையை பாதுகாப்பாக வழிநடத்தியதாகவும், புதிய ஜனாதிபதி எதிர்கால பயணத்தை தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தான் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தனது வாழ்நாள் முழுவதையும் இலங்கை தாய்நாட்டிற்கு சேவையாற்ற தன்னை அர்ப்பணிப்பதாகவும், தான் ஜனாதிபதியாக இருந்த போது தமக்கு ஆதரவளித்து ஆதரவளிக்காத அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

VIDEOS

Recommended