• முகப்பு
  • இலங்கை
  • அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சியை திறந்து வைப்பு

அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சியை திறந்து வைப்பு

அமைச்சின் ஊடகப் பிரிவு

UPDATED: Jul 19, 2024, 2:39:35 PM

 அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சியை இன்று (19) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் (BIMCH) திறந்து வைத்தார்.

original/inshot_20240719_200219636
இந்த நிகழ்வை Indian Water Today (pvt) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமை தாங்கினார்.

இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம் "நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவத்திற்கு செயலூக்கமான வலையமைப்பினை வழங்குதல் மற்றும் உலகளாவிய நீர் நெருக்கடிக்கான தீர்வுகளை அடைவதில் ஒன்றிணைந்து பணியாற்றுதல்" என்பதாகும்.

மேலும், இந்த நிகழ்வு இலங்கையின் நீர் மற்றும் கழிவு நீர் துறையில் வணிக வாய்ப்புகளை ஆராய்ந்து அறிவைப் பகிரவும், சரியான வணிக தளத்தை உருவாக்கவும் உதவுகிறது. கடல் சந்தைகளில் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருக்கிறது.

இதனால், இந்த நிகழ்வு இந்தியா மற்றும் இலங்கையின் நீர் மற்றும் சந்தை வாய்ப்புகளுக்கு கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு தீர்வு வழங்குநர்கள் எல்லைகளைத் தாண்டி வணிக மற்றும் வர்த்தக வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையின் நீண்ட கால மூலோபாய கூட்டணிகள் மற்றும் கட்டமைப்புகளில் கவனம் செலுத்துவதற்கு இந்த திட்டம் பங்காற்றுகின்றது.

இந்நிகழ்வில், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நீர் வழங்கல் அமைச்சின் திட்டமிடல் மேலதிக செயலாளர் சுகத் தர்மகீர்த்தி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பிரதி தலைவர் சஞ்ஞீவ விஜயகோன், அமைச்சின் பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர், சமூக நீர் வழங்கல் பிரதி பணிப்பாளர் ஆனந்த குமார மாபா, ION Exchange India வின் தலைவர் சாஹில் சாகா, ION Exchange India வின் நிறைவேற்று பிரதி தலைவர் சந்தீப், இலங்கை சோலர் கைத்தொழில் சங்க தலைவர் உபயவர்தன மற்றும் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended