கண்டி மக்கள் சபை கயிறு போராட்டம் நடத்துகின்றது

கண்டி நிருபர் - ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Sep 1, 2024, 3:28:54 PM

கண்டி மக்கள் சபை என்ற சிவில் அமைப்பு கண்டி நகரில் மஞ்சள் கயிறு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. 

எதிர் வரும் ஜனாதிபதி தேர்தலில் ஊழல் மொசடகளில் ஈடுபடுவோருக்கும் வரப்பிரசாதங்களை வழங்கு வோருக்கும் வாக்களிக்க மாட்டோம் என்ற பிரசார நடவடிக்கையில் ஒரு கட்டமாக பொது மக்களை அறிவுறுத்தி அவர்களது கையில் மஞ்சள் கயிறு ஒன்றைக்கட்டுவதே மேற்படி போராட்டமாகும்.

original/img-20240901-wa0067
இதில் கண்டியைச் சேர்ந்த சர்வமத அமைப்பு, மற்றும் தொழிற் சங்கங்கள், சட்டத்தரணிகள் உற்பட பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பங்கு கொண்டனர். 

 கண்டி ஜோர்ஜ் ஈ டி சில்வா பூங்காவில் பாதசாரிகளுக்கு அவ்வாறு அறிவுறுத்தல் வழங்கி மஞ்சள் கயிறுகளை அணிவித்தனர்.

 

VIDEOS

Recommended