• முகப்பு
  • இலங்கை
  • வடக்கின் மீளெழுச்சி திட்டங்களுக்காக ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்

வடக்கின் மீளெழுச்சி திட்டங்களுக்காக ஜப்பானின் துறைசார் அறிவு பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்

இர்ஷாத் ரஹ்மதுல்லா

UPDATED: Jun 29, 2024, 8:15:22 AM

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய (JICA) தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகள் இடையே ஆளுநர் செயலகத்தில் விசேட கலந்துரையாடல் நடைபெற்றது.

original/img-20240629-wa0093
இந்த கலந்துரையாடல், JICA தொண்டர்களை வரவழைத்து முன்னெடுக்கவுள்ள திட்டங்களை ஆளுநருக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது.

வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். பிரணவ நாதனும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்.

ஜப்பான் பாரிய அழிவிலிருந்து மீண்டெழுந்ததில் அவர்களின் அறிவு முக்கியப் பங்காற்றியது, இது வடக்கின் மீளெழுச்சி திட்டங்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டார்.

 தொழில்நுட்ப அறிவு, திறன் அபிவிருத்தி, மற்றும் மனிதவள முகாமைத்துவத்தில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

விவசாயம், கல்வி, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, நிதி முகாமைத்துவம், ஊட்டச்சத்து திட்டங்கள், மற்றும் விசேட தேவையுடையோருக்கான கல்வி போன்ற துறைகளில் புதிய மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டங்களை செயல்படுத்த தங்கள் அமைப்பு தயாராக உள்ளதென JICA பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதற்கு  ஆளுநரின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம் என்றும் அவர்கள் கூறினர்.

 திண்ம கழிவு முகாமைத்துவம் மற்றும் பிளாஸ்டிக் அற்ற சூழலை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதற்காக ஜப்பான் நாட்டிலிருந்து துறைசார் அனுபவமிக்க தொண்டர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வரவழைக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended