• முகப்பு
  • இலங்கை
  • JVP-யின் வன்முறை வரலாறு மக்கள் நினைவில் இருந்து மங்கவில்லை - பிரசன்ன ரணதுங்க

JVP-யின் வன்முறை வரலாறு மக்கள் நினைவில் இருந்து மங்கவில்லை - பிரசன்ன ரணதுங்க

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Aug 30, 2024, 3:11:56 AM

JVP-யின் வன்முறை வரலாறு மக்கள் மனதில் இன்னும் பசுமையாகவே உள்ளது. 2022-இல், அநுர குமாரவின் தலைமையில் அதைப் மறுபடியும் முயற்சித்தனர்,

ஆனால் அது இம்முறை அமுலுக்கு வரவில்லை. இவ்வகையான தலைவர்கள் நாட்டுக்கு அவசியமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, நிபந்தனையின்றி நாட்டின் நலனில் உறுதியாக இருப்பவர்களை ஆதரிக்க முடிவு செய்தோம்.

இதற்காகத்தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தோம்.

இந்த கருத்துக்களை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நேற்று (29) மொணராகலையில் நடைபெற்ற 'இயலும் ஸ்ரீலங்கா' வெற்றிப் பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்துள்ளார்.  

 

VIDEOS

Recommended