• முகப்பு
  • இலங்கை
  • கோழைத்தனமான தாக்குதலால் ஒருபோதும் ஹமாசின் பயணத்தை தடுக்க முடியாது - ரிஷாட் பதியுதீன் காட்டம்

கோழைத்தனமான தாக்குதலால் ஒருபோதும் ஹமாசின் பயணத்தை தடுக்க முடியாது - ரிஷாட் பதியுதீன் காட்டம்

Safny ahamed

UPDATED: Aug 1, 2024, 12:57:16 PM

கோழைத்தனமான தாக்குதல்களி னால் ஒரு போதும் பாலஸ்தீனத்தின் விடுதலை பாதையினை முடக்க முடியாது. இது அப்பட்டாமான மனித உரிமை மீரலாகும் ரிஷாத் பதியுதீன் கண்டனம்.

தமது மண்ணுக்கான உரிமை மீட்பு போராட்டத்தில் நிலைத்து நின்ற பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அரசியல் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் ஹனியா படுகொலை சம்பவமானது மிலேச்சனத்தின் வெறியர்களின் முகங்களை காட்டுகின்றது,இப் படுகொலைகளை மனிதத்துவம் கொண்ட எவராலும் அங்கீகரிக்க முடியாது என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியு தீன் வெளிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது -

ஆக்கிரமிப்பினை மட்டும் கொண்டு ஹமாஸ் மக்களையும்,சிறுவர்களையும்,கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியயோர்கள் என பாராது கொடூரமான முறையில் கொன்ரொழித்து  இஸ்ரேலின் இந்த செயலை நான் பிரதி நிதித்துவம் செய்யும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸானது வண்மையாக கண்டிக்கின்றது.

இலங்கை -பலஸ்தீன உறவு என்பது பல ஆண்டுகள் நெருக்கமானது,இந்த உறவானது எம்மில் இருந்து பிரிக்க முடியாததொன்று என்பதால் தான் நாம் இழப்புக்களின் வேதனையை உணர்கின்றோம்.

பாலஸ்தீனத்தின் போராட்டம் என்பது உலகலாவிய வல்லரசுகள் கூட நியாயம் கண்டுள்ள நிலையில்,இஸ்ரேல் தொடர்ந்து கட்டுக்கடங்காது,காட்டு மிராண்டித்தனமாக மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் அம்மக்களை மேலும் பல இழப்புக்களுக்குள் தள்ளிவருகின்றது.

அப்பட்டமான மனித உரிமை மீறல்களாக இந்த படுகொலை காணப்படுவதாகவும்,எல்லை மீறும் இஸ்ரேலின் இந்த மோசமான மனித படுகொலையினை நிறுத்த உலக நாடுகள் தொடர்ந்தும் அளுத்தம் கொடுக்க வேண்டுவதுடன்,இஸ்ரேலின் இத்தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் மர்ஹூம் இஸ்மாயில் ஹனியாவின் மறைவுக்கு எமது கட்சி ஆழ்ந்த கவலையினை வெளிப்படுத்துகின்றது,அதே போல் சஹீதுடைய அந்தஸ்த்தினை எல்லாம் வல்ல அல்லாஹூத்தாஆலா அவருக்கு வழங்க பிரார்த்தனை செய்கின்றேன் என்றும் அவர் கூறினார்.

 

VIDEOS

Recommended