• முகப்பு
  • இலங்கை
  • தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திடீர் விஜயம்

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திடீர் விஜயம்

அஷ்ரப் ஏ சமத

UPDATED: Jun 19, 2024, 11:52:53 AM

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜிவ் சூரியராச்சி தலைமையில்  கொட்டாவையில் உள்ள கொழும்பு மாவட்ட வீடமைப்பு அலுவலகத்திற்கு திடிர் விஜயம் மேற்கொண்டார்.

அங்கு சென்ற அவர் அங்குள்ள ஊழியர்களது பிரச்சினைகளையும் கேட்டறிந்ததுடன் கொழும்பு மாவட்டத்தின் வீடமைப்பு அபிவிருத்திகள் மற்றும் முன்னேற்ற அறிக்கை பற்றியும் கலந்துரையாடினார்..

அத்துடன் பாதுக்க, சீத்தாவக்க போன்ற பிரதேசங்களில் உள்ள இரப்பர் ,பெருந்தோட்டத்தில் இந்திய வீடமைப்புத் திட்டம் நிர்மாணிக்கப்படவுள்ள வீடமைப்புத் திட்டம் அமையும் காணியை தோட்டக் கம்பனி அதிகாரிகளுடன் கலந்துரையாடி காணியையும் பார்வையிட்டார்.

அத்துடன் அங்கு மேற்கொள்ளவுள்ள பெருந்தோட்ட வீடமைப்பு நிர்மாணிப்பணிகள், காணி சீராக்கல் பற்றிய பிரச்சினைகளையும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரிய காணி சீர்படுத்தல் வீடுகளை உ்டன் நிர்மாணித்தல் போன்ற வேலைகளை ஆரம்பிக்கும் படியும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர், பிரதிப் பொதுமுகாமையாளகளும் இந் விஜயத்தில் கலநது கொண்டனர்.

 

 

VIDEOS

Recommended