• முகப்பு
  • இலங்கை
  • தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

தபால் மூல வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Sep 1, 2024, 4:33:24 PM

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச் சீட்டுக்களில் 95 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 இராணுவத் தளங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்களே இன்னும் விநியோகிக்கப்படவில்லை" என, சிரேஷ்ட பிரதித் தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

 இந்த வாக்குச் சீட்டுக்கள், நாளை (02) அனுப்பி வைக்கப்படும்" என்றும், "இம்முறை 2024 இல், 712,318 அரச துறை ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

original/img-20240901-wa0070
 இம்முறை மொத்த வாக்காளர்களில், 76,977 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு காலம், செப்டம்பர் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended