• முகப்பு
  • இலங்கை
  • உடரட்ட மெணிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி உயிரிழப்பு

உடரட்ட மெணிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி உயிரிழப்பு

ராமு தனராஜா

UPDATED: Jun 4, 2024, 6:27:39 AM

Sri Lanka News

நேற்று (03) கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெணிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி உயிரிழந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

47 வயதான போலந்து Mercin Bartlomies என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 குறித்த புகையிரதத்தில் எல்லைக்கு பயணித்த வெளிநாட்டு சுற்றுலா பயணி, இதழ்கஸ்ஹின்ன மற்றும் ஒஹிய புகையிரத நிலையங்களுக்கு இடையில் நேற்று (03) மாலை 4 மணியளவில் புகையிரத சுரங்கப்பாதையில் மோதி உயிரிழந்துள்ளார்.

Sri Lanka News and Updates 

புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உயிரிழந்த வெளிநாட்டவரின் சடலத்தை குறித்த புகையிரதத்திலேயேஹப்புத்தளை புகையிரத நிலையத்திற்கு கொண்டு சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 அவரது சடலம் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப சேபால ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 

 

 

VIDEOS

Recommended