தமிழன் பத்திரிகையின் 4வது ஆண்டு விழா

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Jun 28, 2024, 6:56:56 PM

இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் பேசும் மக்களுக்கான தமிழன் பத்திரிகையின் 4வது ஆண்டு விழா 28.06.2024 வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை இராமகிருஷ்ணன் மண்டபத்தில், பத்திரிகையின்  பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜா தலைமையில் நடைபெற்றது.

original/inshot_20240629_000853771
இதில் லிப்பட்டி பப்ளிகேஷன் தலைவர் திலித் ஜயவீர கலந்து கொண்டு அதிதியின் பிரதம உரையினை நிகழ்தினார்.

மேலும், கல்விப் பணி கந்தையா பத்மநாதன், கலைப்பணி திருமதி வைத்திஜயந்திமலா, ஊடகப் பணி வீ.தனபாலசிங்கம், தமிழ் இலக்கியம் அல் அஸூமத், சமுக சேவை புரவலர் ஹாசீம் உமர் ஆகியோர் இந்த நிகழ்வின் போது, மாலை அணிவித்து, பொண்ணாடை போர்த்தி, நினைவு சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

original/img-20240628-wa0195
நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு விசேட வினா விடை போட்டி, சிறந்த மாணவருக்கான தமிழனின் உதவித் திட்டம் ஆகியவை இடம்பெற்றன. 

இசை, வீனை, பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவுப் ஹக்கீம், இராத கிருஷ்ணன், றிசாத் பதியுத்தீன், மனோ கனேசன், எம். ஏ.சுமந்திரன், வட மேல் மாகாண ஆளுனர் நசீர் அஹமட், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். ஆமீன், வீரகேசரி பிரதம ஆசிரியர் ஸ்ரீ கஜன், இந்திய உயர் ஸ்தாணிகர் ஆலையத்தினை பிரதிநிதித்துவம் செய்து நவ்யா மற்றும் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், தமிழன் பத்திரிகையின் ஊழியர்கள் மற்றும் அபிமானிகளும் கலந்து சிறப்பித்தனர்.

 

VIDEOS

Recommended