• முகப்பு
  • விளையாட்டு
  • தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டு மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தமிழ்நாட்டு மாணவர் தங்கப்பதக்கம் வென்றார்.

செந்தில் முருகன்

UPDATED: Jun 16, 2024, 9:30:47 AM

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இதில் கலந்துகொண்டு விளையாடினர். 

இதில், குத்துச்சண்டை போட்டியில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் நேற்று இறுதி போட்டி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற மயிலாடுதுறையை சேர்ந்த பல்லவராயன் பேட்டை நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் வீரசிவாஜி என்ற வீரர் பஞ்சாப் வீரரை எதிர்கொண்டு மோதி வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றார்.

முன்னதாக இவர், கடந்த 11 ஆம் தேதி அரியானா வீரரை கால் இறுதியிலும், 12ஆம் தேதி இமாச்சல் பிரதேஷ் வீரரை அரை இறுதியிலும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி பெற்ற தமிழக வீரர் வீரசிவாஜிக்கு சங்கத்தின் செயலர் குர்தீப் சிங் கோப்பையை வழங்கி பாராட்டினார்.

 

VIDEOS

Recommended