• முகப்பு
  • அரசியல்
  • வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் பாதுகாப்புடன் அனுப்பி வைப்பு

அஷ்ரப் ஏ சமத்,எம்.ஏ.காசிம்,ஏ.எம்.கீத்,எம்.கே.எம்.நியார்

UPDATED: Sep 20, 2024, 10:41:13 AM

திருகோணமலை.......

ஜனாதிபதி தேர்தலானது நாளை (21)இடம் பெறவுள்ள நிலையில் வாக்கு சாவடிகளுக்கான வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இன்று (20)அனுப்பி வைக்கப்பட்டன.

original/t-3
திருகோணமலை மாவட்டத்தில் குறித்த வாக்கு பெட்டிகளானது திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் வைத்து விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.

மொத்தமாக 318 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டன. மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பதுளை............. 

பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும்  வாக்களிப்பு  பெட்டிகளை உரிய முறையில் எடுத்துச் செல்லும் நடவடிக்கைகள் மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் இடம்பெற்றது.

original/badu-02

இதற்காக நகரில் ஆங்காங்கே பல காவலரன்கள் அமைக்கப்பட்டிருந்தது. பதுளை ஊவா கல்லூரி, விஷாகா ம.வி.,போன்ற இடங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள் விநியோகம்  நடைபெற்றது.

வவுனியா...

original/20240920_110927
வன்னிமாவட்டத்தில் 387 வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் பி.. சரத்சந்திர தெரிவித்தார்.தேர்தல் தொடர்பாக வவுனியா மாவட்டசெயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்..

எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில்  வன்னிமாவட்டத்தில்  306081 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 128585 வாக்காளர்களும், முல்லைத்தீவில் 86889 வாக்காளர்களும் மன்னார் 90607 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். 

இதேவேளை தேர்தலில் வாக்களிப்பதற்காக மூன்று மாவட்டங்களிலும் 387வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்க்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் தேவையான ஆவணங்கள் இன்று பேருந்துகள் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

original/img_20240920_075611
தேர்தல்கடமைகளுக்காக வன்னி மாவட்டத்தில் 4796 அரச ஊழியர்கள் கடைமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன்வவுனியாமாவட்டத்தில்பொலிசார்,விசேடஅதிரடிப்படையினர், ஊர்காவற்படை என 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்இதேவேளை வவுனியாவில் இதுவரை 36சிறியளவிலான தேர்தல் முறைப்பாடுகளே பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சாதாரண வாக்குஎண்ணும் பணிகளுக்காக வவுனியாவில்12,முல்லைத்தீவில் 8,மன்னாரில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன்,  தபால்வாக்குகள்எண்ணுவதற்காக10 நிலையங்களும்  எனமொத்தமாக 37வாக்குஎண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இதேவேளை தபால் வாக்குகள் நாளைமாலை 6 மணியளவில் எண்ணுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான ஏற்ப்பாடுகள் அனைத்தும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 

 

VIDEOS

Recommended