• முகப்பு
  • அரசியல்
  • வவுனியாவில் வாக்கு பெட்டிகள் உரிய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

வவுனியாவில் வாக்கு பெட்டிகள் உரிய நிலையங்களுக்கு அனுப்பிவைப்பு

வவுனியா

UPDATED: Sep 20, 2024, 3:37:39 AM

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

original/img_20240920_075324
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில் வவுனியாமாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துசெல்லப்பட்டுள்ளது.  

வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக செயற்ப்பட்டுவரும் சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்களிப்பு நிலையங்களிற்கு பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது.

original/img_20240920_080217
இதேவேளை வவுனியாவில் 128585 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளதுடன் தேர்தல் கடைமைகளுக்காக பொலிசார் உட்பட 2500 ற்கும் மேற்ப்பட்ட அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended