• முகப்பு
  • அரசியல்
  • நாளை 23/09/2024- ம் தேதி தி.மு.க. மாணவர் அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் .

நாளை 23/09/2024- ம் தேதி தி.மு.க. மாணவர் அணி பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் .

கார்மேகம்

UPDATED: Sep 22, 2024, 9:12:53 AM

ராமநாதபுரம் மாவட்டம்

தி.மு.க. மாணவர் அணி  பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நாளை 23/ ந்- தேதி அன்று நடைபெறுகின்றது என எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தகவல் 

( நேர்காணல்)

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தி.மு.க. தலைவர் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மாநில தி.மு.க. மாணவரணி செயலாளர் எழிலரசன் வேண்டுகோளின்படி

திமுக

ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. மாணவர் அணிக்கு ஒன்றியம் நகரம் பேரூர் வாரியாக அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் நாளை 23- ந்தேதி (திங்கட்கிழமை ) காலை 10- மணிக்கு பாரதி நகரில் உள்ள பீமாஸ்வைஸ்ராய் மண்டபத்தில் தி.மு.க. மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி துணைச் செயலாளர் அதலை செந்தில்குமார் மாநில துணைச் செயலாளர் பூரண சங்கீதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது ( நேர்காணலில் கலந்து கொள்ளலாம்)

இதில் ராமநாதபுரம் மாவட்ட மாணவர் அணிக்கு ஒன்றியம் நகரம் பேரூர் அளவில் அமைப்பாளர் ஒருவரும் துணை அமைப்பாளர்கள் 5 பேரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்

DMK

இதற்காக விருப்ப மனு வழங்கிய அனைவரும் தவறாமல் தங்களின் புகைப்படம் கல்வி விவரங்கள் கல்லூரி அடையாள அட்டை தாங்கள் கட்சியில் ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கைகளுடன் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் 

இதுவரை விருப்ப மனு வழங்காத கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்களும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்

Latest Political News In Tamilnadu

நேர்காணலுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செ.சுரேஷ் துணை அமைப்பாளர்கள் ஸ்டாலின் வசந்த் பொன்மனி சங்கர் சண்முகப்பிரியா சம்பத்குமார் ஆகியோர் செய்து வருகின்றனர். 

 

VIDEOS

Recommended