• முகப்பு
  • அரசியல்
  • தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் கருத்தில் கொண்டே களம் இறங்கிய TMVP

தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் கருத்தில் கொண்டே களம் இறங்கிய TMVP

ராமு தனராஜா

UPDATED: Oct 13, 2024, 10:48:31 AM

கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் பிரச்சினை ,வீரமுனை வரவேற்பு கோபுரம்,திருக்கோவில் இலுமனைட் பிரச்சினை  என அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கான பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டே களத்தில் இறங்கியுள்ளேன். என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டத்தின் வேட்பாளர் அற்புதலீங்கம் விஸ்கரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் இன்று காலை இடம் பெற்ற


ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.ஒரே நபருக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதில் பயன் இல்லைபொய் முகநூல் விமர்சன நம்ப வேண்டாம்.இளைஞர்கள் சொந்த புத்தியில் சிந்தித்துப் பாருங்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் செய்யும் அபிவிருத்தியினை சிந்தித்துப் பாருங்கள் அம்பாறை மாவட்டத்தில் அவ்வாறான ஒரு அபிவிருத்தியை செய்ய வேண்டும் என்ற நோக்கில் களம் இறங்கி இருக்கிறேன் என மேலும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எங்கள் கட்சியில் அம்பாறை மாவட்டத்தில் 10 பேர் களம் இறங்கி இருக்கிறோம். அவற்றில் ஒருவரையேனும் தெரிவு செய்தால் அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு வேலை திட்டங்களை செய்து கொடுப்போம் என்பதை உறுதியாக கூறுவதாகவும் அவர் இதன் போது குறிப்பிட்டு இருந்தார் .

 

VIDEOS

Recommended