• முகப்பு
  • அரசியல்
  • எனது பெயரில் மதுபான சாலைகள் இல்லை. ஆனால் தனியார் பாடசாலைகள் உள்ளன. வேலு குமார் எம்.பி

எனது பெயரில் மதுபான சாலைகள் இல்லை. ஆனால் தனியார் பாடசாலைகள் உள்ளன. வேலு குமார் எம்.பி

கண்டி நிருபர் - ஜே.எம்.ஹாபீஸ்

UPDATED: Aug 19, 2024, 3:22:44 PM

நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரனில் விக்கரமசிங்க என்பதே உண்மையாகும் என கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். 

கண்டியில் நடத்த ஒரு கலந்துரையாடலின் போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்-

நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக் கூடியவர் ரனில் விக்கிரமசிங்க என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்கு அமைய துணிச்சலாக முன்வந்து அவரின் வெற்றிக்கு எனது ஒத்துழைப்பை வழங்கி வருகிறேன்.

அது தவிற ஒரு சிலர் கூறுவது போல மதுபான சாலை அனுமதிப்பத்திரமோ வேறு சலுகைகளோ எனக்குக் கிடைக்கவும் இல்லை. நான் அவற்றை எதிர்பார்க்கவும் இல்லை. எனக்கு எதுவித மதுபான பேர்மிட்டும் இல்லை. ஆனால் எனது பெயரில் நாட்டுக்கு கல்வி வழங்கும் பல நிறுவனங்கள் உள்ளன. 

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எவ்வித அடிப்படையும் இல்லாத குற்றச்சாட்டை என் மீது வைத்து வருகிறார்.

அன்று நாடு நல்ல நிலையில் இருந்த போது, அந்த ஆட்சி சரிவராது என்று வேறு ஒருவரை ஜனாதிபதி கதிரையில் அமர்த்திய பங்காளிகளில் அவரும் ஒருவர். இப்போது மீண்டும் அவர் ஒரு வருடன் சேர்ந்து, அது போன்ற ஒரு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிக்கிறார்.

கோட்டா போன்ற இன்னொருவரை ஜனாதிபதியாக்க அவர் முயற்சிக்கிறார். ஆனால் நாட்டிற்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கதான். 

சேறு பூசுவதால் எனது பயணத்தை தடுத்துவிட முடியாது. எனது தெரிவே இந்நாட்டு மக்களின் தெரிவாகும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் என்றார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended