• முகப்பு
  • அரசியல்
  • துரோகத்தின் மொத்த உருவம் ஓ பன்னீர் செல்வம் தான் - ஆர் பி உதயகுமார்

துரோகத்தின் மொத்த உருவம் ஓ பன்னீர் செல்வம் தான் - ஆர் பி உதயகுமார்

அந்தோணி ராஜ்

UPDATED: Oct 21, 2024, 7:23:29 PM

விருதுநகர் மாவட்டம்

ராஜபாளையம் அருகே சங்கம் பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏக்கள் சுப்பிரமணியம், ராஜவர்மன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ஆர்பி உதயகுமார் பேசும்போது :

அம்மா உருவாக்கிய அரசை எதிர்த்து வாக்களிக்க வேண்டாம் என்று சபாநாயகர் கூறும் போதும் 11 சட்டமன்ற எம்எல்ஏக்களை வைத்து அம்மாவின் அரசு ஆட்சி கவிழ வேண்டும் என்பதற்காக இரட்டை இலைக்கு எதிராக வாக்களித்தது ஓ பன்னீர்செல்வமா அல்லது எடப்பாடி பழனி சாமியா என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 

ஆர்பி உதயகுமார்

சாத்தான் வேதம் ஓதுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். யார் விசுவாசத்தை பற்றி பேசுவது. யார் துரோகத்தைப் பற்றி பேசுவது. இரண்டு தினங்களுக்கு முன்பாக மானம் இல்லாமல் வெட்கமில்லாமல் ரோஷம் இல்லாமல் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதை மறந்து விட்டு அவர் பேசியிருக்கிறார் என்று சொன்னால் அதிமுக 2 கோடி தொண்டர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். 

ஆண்டிப்பட்டி அம்மா ஜெயித்த தொகுதி. தலைவர் ஜெயித்த தொகுதி. அந்தத் தொகுதியில் இரட்டை இலை எப்படி தோற்கும்? நீங்கள் தோற்றுவிட்டீர்கள். எனவே உங்களுக்கு வேட்டி கட்டுவதற்கு யோக்கியதை இருக்கிறதா. 

ஆண்டிப்பட்டியில் இரட்டை இலை தோற்றது சதி, சூது,  சூழ்ச்சி, துரோகம் பெரியகுளம், கம்பம் போன்ற தொகுதிகளில் தோற்றாலும் பரவாயில்லை ஆண்டிப்பட்டியில் எப்படி இரட்டை இலை தோற்றது. 

ஓ பன்னீர் செல்வம் 

அப்படி இருக்கும்போது நீ எப்படி கட்சிக்கு தலைவராக இருக்க முடியும். தலைவராக இருக்கும் நபர் தோற்ற பிறகு அவரை பல்லாக்கில் வைத்து சுமக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டன் ஒருநாளும் அதற்கு தயாராக இல்லை. 

முதலமைச்சர் வேட்பாளர் தோற்றுவிட்டால் கட்சி ஒருங்கிணைப்பாளரான நாம் கட்சியை கபளீகரம் செய்து விடலாம் என்று நினைத்த துரோகத்திற்கு அம்மா அவர்கள் சம்பட்டி அடி கொடுத்து இன்று வேட்டி கட்ட முடியாமல் நடந்து கொண்டிருக்கிறீர்கள்.

செய்ததெல்லாம் நீங்கள். யோக்கியன் வருகிறான் செம்பை எடுத்து உள்ளே வை என்று போல் பேசுகிறீர்கள். துரோகத்தின் மொத்த உருவம் நீங்கள் தான். அதை இன்று அனுபவிக்கிறீர்கள். இன்னும் அனுபவிப்பீர்கள். 

விருதுநகரில் உள்ள ஏழு தொகுதியையும் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அறிஞர் அண்ணா தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி அரிசி நிச்சயம் என்பதை போல் விருதுநகர் மாவட்டத்திற்கு மூன்று அமைச்சர்கள் லட்சியம். ஒரு அமைச்சர் நிச்சயம் என்று உறுதியாகக் கூறுகிறேன்.

 

VIDEOS

Recommended