ராமநாதபுரத்தில் திமுக இளைஞரணி சார்பாக முப்பெரும் விழா

கார்மேகம்

UPDATED: Jul 1, 2024, 5:04:35 AM

ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு ஒன்றிய தி.மு.க.இளைஞர் அணி சார்பாக முத்தமிழ் அறிஞர்‌ டாக்டர்‌ கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்து வெற்றி பெறச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா ஆகிய முப்பெரும் விழா

அதனையொட்டி 3 - ம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு விழா ரெகுநாதபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது இவ்விழாவிற்கு இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க. மாவட்ட கழக செயலாளருமான காதர் பாட்சா ( எ) முத்துராமலிங்கம்‌ எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி‌ எம்.பி.ஆகியோர் முன்னிலை வகித்தனர்

தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சங்கு ( எ) முத்துராமலிங்கம் மாவட்ட‌‌ கவுன்சிலர் கே.ஆதித்தன் ஆகியோர் விழாவினை  துவக்கி வைத்தார்கள்

இவ்விழாவில் ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும்‌ பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு வடமாடு மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை கண்டுகழித்தனர்.

 

VIDEOS

Recommended