• முகப்பு
  • அரசியல்
  • ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது பொது கூட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது பொது கூட்டம்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Jun 8, 2024, 6:21:08 PM

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் புதிய கூட்டணியும் இணைந்து நடத்தும் முதலாவது பொது கூட்டம் இன்று (08) பிற்பகல் 2.00 மணியளவில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் அம்பலாந்தோட்டை நகரில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமானது. 

original/fb_img_1717870654016

 "எதிர்காலத்திற்காக ஒன்றுபடுவோம் - வெற்றிக்காக" என்ற தொனிப்பொருளில் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான அம்பலாந்தோட்டை பொது கூட்டம் விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

original/fb_img_1717870637920

இந்த கூட்டத்தில் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன,அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜெயந்த,நிமல் லான்சா,ஜோன் செனவிரத்ன பிரியங்கர ஜயரத்ன, சுரேன் ராகவன்,எஸ். முஷாரப், அலி சப்ரி ரஹீம், நிமல் பியதிஸ்ஸ, பிரமநாத் சி.தொலவத்த, ஜகத் புஷ்பகுமார, சுதத் மஞ்சுள மற்றும் புதிய கூட்டணிக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மேயர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 

original/fb_img_1717870643955
அடுத்த பொதுக்கூட்டம்  சகல மாவட்டங்களிலும் தொடர்ந்து இடம் பெறும் என்று இதன் போது தெரிவிக்கப்பட்டது.

 

VIDEOS

Recommended