• முகப்பு
  • அரசியல்
  • பெண் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்குவது தொடர்பில் பேசப்படுகிறது

பெண் ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக களம் இறக்குவது தொடர்பில் பேசப்படுகிறது

சப்தம் - கிளிநொச்சி

UPDATED: Jun 15, 2024, 4:17:44 AM

ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் செயலாளர் நாயகம், முன்னாள் வடமாகாண அமைச்சர்  ஆனந்தி சசிதரன் ஜனாதிபதி தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குவது தொடர்பில் செய்தியாளர்களை தெளிவுபடுத்தினார்.

 வடமராட்சி ஊடக இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே பொது வேட்பாளராக களமிறங்கும் விடயத்தை தெரிவித்தார்.

 தற்போது அனுரகுமார திசாநாயக்க சஜித் பிரேமதாச, ரணில் விக்ரமசிங்க போன்றோர்கள்,13 வது திருத்தத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

 இது வெறும் தேர்தல் காய் நகர்த்தல் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

13 நடைமுறைக்கு வர வேண்டும் என்று பல்வேறு இடங்களில் பேசிக்கொண்டே இருக்கின்றேன்.

 ஏன் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையிலும் இது தொடர்பில் குரல் எழுப்பியுள்ளது என்பதையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவr தெரிவித்தார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended